search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்மை கண்டறியும் குழு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும்
    • தகவல் தொழில்நுட்ப திருத்த சட்டம் 2023-க்கு எதிரான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது

    மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்த உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

    மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும். அந்த தகவல் தவறு என அறிவித்து விட்டால் அந்தப் பதிவை சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்கள் உடனடியாக நீக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அவற்றின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு (FactCheck Unit) அமைக்கும் அரசாணையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2023-க்கு எதிரான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
    • இதுபோன்ற தகவல்களை உண்மை கண்டறியும் குழு சரிபார்க்கும்.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், மத்திய அரசு திட்டங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்த உண்மை கண்டறியும் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும். அந்த தகவல் தவறு என அறிவித்து விட்டால் அந்தப் பதிவை சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள் உடனடியாக நீக்க வேண்டும்.

    அப்படி இல்லை எனில் அவற்றின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×